சென்னை: அதிமுக மாணவர் அணியின் சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் வருகிற 25ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்த தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது கடமையாகும். அன்னை தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 25ம் தேதி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களில் ‘வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்’ நடைபெற உள்ளன.