சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற எம்பி சந்தோக் சிங் சவுத்ரி நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகின்றது. முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்று இருந்தனர். லூதியானாவின் லதோவாலில் நேற்று காலை ஒற்றுமை யாத்திரை தொடங்கியது. இதில் இரண்டு முறை எம்பியான சந்தோக் சிங் சவுத்ரி கலந்து கொண்டார். ஜலந்தர் அருகே பிலாப்பூர் பகுதியில் யாத்திரை வந்தபோது எம்பி சந்தோக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலமாக பக்வாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.