டோங்கிரி: பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்கிறார். ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், டோங்கிரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.