குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாடினால் புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாடினால் புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இணையதளத்தில் குறவன் குறத்தி என தேடும்போது ஆபாச நடனங்கள் வருவதாக மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார். இணையத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்கவும் மனுதாரர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்நாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது எனவும், குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாடினால் புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

Related Stories: