ரேஷன் பொருட்களில் குறைபாடு இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை: நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் குறைபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது : பொங்கல் தொகுப்பிற்கு தேவையான தரமான அரிசியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவை தரமானதாக இருக்கும். அதில் ஏதாவது குறைபாடு இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: