ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு கூடுதலாக 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.