காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காட்டில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பு கட்டடப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரரை நேரில் கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக 76 இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அந்த குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கண்டித்தார்.