முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள 2500 கோயில்களுக்கு வரைவோலை வழங்கும் விழா

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள 2500 கோயில்களுக்கு வரைவோலை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.   

2021-2022-ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண்.27 மற்றும் 28-ல் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கிராமப்புறத் கோயில்கள் திருப்பணி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1250 கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் 1250 கோயில்கள் இறுதி செய்யப்பட்டு மொத்தம் 2500 கோயில்களுக்கு வரைவோலை வழங்கப்பட உள்ளது.

இத்திருப்பணித் திட்டத்தின் கீழ் இறுதி செய்யப்பட்ட 2500 கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளும் பொருட்டு வரைவோலை வழங்கும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை, வில்லிவாக்கம், திருவள்ளூர் நெடுஞ்சாலை, சிவசக்தி காலனி, அகத்தீஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories: