மாணவியை பலாத்காரம் செய்த 84 வயது முதியவர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது

கடலூர்: மாணவியை பலாத்காரம் செய்த 84 வயது முதியவர் உள்பட 3 பேரை போலீசார் போக்ேசா சட்டத்தில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தில் சற்று மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இடையன்பால்செரி கிராமத்தை சேர்ந்த அமலநாதன் (48), சூர்யா என்கிற ஜெயசூர்யா(19), ஜெயராமன் (84) ஆகியோர் தனித்தனியாக சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவி சோர்வாக இருப்பதை கண்ட அவரது தாய் ஏன் சோர்வாக இருக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது, மாணவி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் மீனா சம்பந்தப்பட்ட 3 பேர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், மாணவி பலாத்காரம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவி பள்ளிக்கு சென்று வரும் நேரத்தில் கடைக்கு அழைத்து சென்று மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததது தெரியவந்தது.  இதையடுத்து, நேற்று 3 பேரையும், கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: