சென்னை: சமூக வலைதளங்களில் துணை இல்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து, அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தவறான உறவுக்கு அழைத்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஜான்சி ராணி (பெயர் மாற்றம்). இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘எனது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத ஒரு நபர், ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி தவறான உறவுக்கு அழைக்கிறார்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர்.