குமரியில் இன்று காலை சோகம்: யானை தாக்கி பெண் பலி: கணவர் கண் எதிரில் பரிதாபம்

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (55). அவரது மனைவி ஞானவதி (50). 2 பேரும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள். அரசு ரப்பர் கழகம் சிற்றார் கோட்டம் கூப் எண் 42 ல் பணியாற்றி வந்தனர். இன்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் ரப்பர் பால் வெட்டும் பணியில் இருந்தனர். அவர்களுடன் மற்ற தொழிலாளர்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த பகுதியில் யானை இறங்கியது. தொழிலாளர்களை பார்த்ததும், யானை விரட்ட தொடங்கியது. யானைக்கு பயந்து ஞானவதியும், மோகன்தாஸ் உள்பட தொழிலாளர்கள் ஓடினர். அப்போது யானையின் கையில் ஞானவதி அகப்பட்டுக் கொண்டார். அவரை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற தொழிலாளர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: