புழல்: சொறி, சிரங்கு மருந்தை குடித்து புழல் சிறை கைதி தற்கொலை செய்து ெகாண்டார். சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). இவருக்கு, போக்சோ வழக்கில் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சொறி, சிரங்கு உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சொறி, சிரங்கு சிகிச்சைக்காக வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.