தென்காசி: பழைய குற்றால அருவியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த நான்கு வயது சிறுமியை வாலிபர் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு நேற்று வந்தார். இவரது 4 வயது மகள் ஹரிணியை அருவிக்கரையில் அமர வைத்துவிட்டு பெற்றோர் குளித்துள்ளனர். பின்னர், அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் சிறுமி இறங்கினாள். தடாகத்திலிருந்து ஆற்றில் தண்ணீர் விழுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் போன்ற மடை வழியாக சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டாள். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டார். இதை பார்த்து பெற்றோரும் கூச்சலிட்டனர்.