சென்னை: புதுக்கோட்டையில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அய்யனார் கோயிலில் ஆதிதிராவிடர்கள் கோயிலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கோயில் நுழைவுக்கு ஆவன செய்தல், அதே கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேநீர் கடையில் ஆய்வு செய்து கடையின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தனர்.