மனித குலத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன்: புத்தகயாவில் தலாய் லாமா உரை

கயா: மனிதகுலத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று புத்தமத குரு தலாய் லாமா கூறியுள்ளார். திபெத்திய புத்தமத குரு தலாய் லாமா, பீகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித நகரமான புத்தகயாவில் நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு புத்த மதபோதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் புத்தகயாவில் உள்ள காலசக்ரா மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலாய் லாமாவின் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் செய்யப்பட்டுள்ளன. காலசக்ரா மைதானம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பக்தர்களிடையே உரையாற்றிய தலாய் லாமா, “எப்போதும் உதவி தேவைப்படுவோருக்கு தான் நாம் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களின் நலன் பற்றி சிந்திக்க வேண்டும். மனிதகுலத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார்.  

Related Stories: