தொழிலக பாதுகாப்பு இயக்குநர் பேச்சு தொழிலாளர்கள் நலனில் அரசு முனைப்புடன் செயல்படுகிறது

சென்னை: சென்னை,தி.நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் மணலி தொழிற்சாலைகள் குழுமம் இணைந்து தொழிற்சாலை மருத்துவ அலுவலர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார், சிபிசிஎல் மேலாண் இயக்குநரும், மணலி தொழிற்சாலைகள் குழுமத்தின் தலைவருமான அரவிந்த் குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் கார்த்திகேயன், மணலி தொழிற்சாலைகள் குழுமத்தின் துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் பேசியதாவது: தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை பேணிக்காப்பதில் தமிழக அரசு மிகவும் முனைப்புடன் செயல்படுகிறது. மேலும் தொழிற்சாலை மருத்துவ அலுவலர்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த உடல்நலனை பாதுகாக்க போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: