சென்னை: சீனாவிலிருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயது பெண், அவரது குழந்தைக்கு தொற்று உறுதியான நிலையில் தாய், மகள் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.