சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து நாகப்பாம்பு உள்பட53 கொடிய விஷபாம்புகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தனர். இதனால், அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது கூடைகளை, சுங்க அதிகாரிகள் திறந்துபார்த்தனர். அதில், தாய்லாந்து வனப்பகுதியில் காணப்படும் மலைப்பாம்பு குட்டிகள் 40, மற்றும் நாகப் பாம்புகளின் குட்டிகள் 13, அரியவகை குரங்கு குட்டிகள் 5, அபூர்வ உயிரினங்கள் 8 என மொத்தம் 66 உயிரினங்கள் மற்றும் விலங்குகள் இருந்தன.