திருமலை: தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஸ்ரீஆண்டாள் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கும் மூலவர் போல் தினமும் பூஜைகள் நடப்பது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதால் அனைத்து கோயில்களிலும் காலையிலும், இரவிலும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரள்கின்றனர்.