இலங்கை: இலங்கையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கண்டி ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது கண்டி நகரில் சாலைகளில் வெள்ளம், ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது, அது போல கண்டி ரயில் நிலையத்தில், தண்டவாளம், நடைமேடை, பயணிகள் நிற்கும் இடம் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்றது.