மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கி விடுவோம். காவித்துண்டைப் போட்டு அவமானப்படுத்தியவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர்.