கொழும்பு: மியான்மர் நாட்டில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகள் சிலர் அவ்வப்போது கடல் மார்க்கமாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சமடைவது வழக்கம். அதன்படி மியான்மரில் இருந்து இந்தோனேசியாவுக்குச் சென்ற ரோஹிங்கியா அகதிகளின் இழுவைப் படகு நடுக்கடலில் சிக்கியது. இயந்திர கோளாறு காரணமாக அந்த இழுவைப் படகு, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் தள்ளாடியது. இலங்கை கடற்கரையின் 3.5 கடல் மைல் தொலைவில் இருந்த இழுவைப் படகை கண்டறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அந்த படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.