பாக். அமைச்சர் பிலாவலுக்கு எதிராக நாடு முழுவதும் பாஜ போராட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ சார்பில் நாடு தழுவிய அளவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பிலாவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் தலைநகரங்களில் திரண்ட பாஜ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் சில இடங்களில் அவரது உருவபொம்மையை தீவைத்து எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போரட்டங்களில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பாஜ மாநில பிரிவு தலைவர்கள் புபேந்திர சிங் சவுத்ரி, பீகாரில் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பேரணி நடத்தினார்கள்.

Related Stories: