சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் மீது வழக்கு: தெலங்கானா போலீஸ் அதிரடி

ஐதராபாத்: சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் மீது தெலங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் வந்தார். அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றார். அப்போது பிரபல யூடியூபர் ஹர்ஷசாயி என்பவர், அந்த இளம்பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இருவரும் நெருக்கமாக இருந்தனர். ஒருகட்டத்தில் அந்தப் ெபண்ணுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக கூறி, அவரை யூடியூபர் ஹர்ஷசாயி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ராஜேந்திரநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் டிசிபி சிந்தமனேனி னிவாஸ் கூறுகையில், ‘தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாண படங்களை சேகரித்து மிரட்டியதாகவும் இளம்பெண் ஒருவர் யூடியூபர் ஹர்ஷசாயி மீது அளித்த புகாரின் பேரில் அவர் மீது நரசிங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக கோண்டாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கதாநாயகியாக வைத்து, ஒரு படத்தில் ஹர்ஷசாயி நடிக்க வைத்துள்ளார்’ என்று கூறினார்.

The post சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் மீது வழக்கு: தெலங்கானா போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: