கன்னியாகுமரியில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: கடலில் நீராடியும், சூரிய உதயத்தை படம்பிடித்தும் மகிழ்ச்சி..!!

கன்னியாகுமரியில்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி வார விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் குவிந்தனர். திருவேணிற்சங்கமம், காந்தி மண்டபம், சுற்றுலா படகுத்துறை போன்ற அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கடலில் ஆனந்தமாக குளித்தும் அலைகளோடு விளையாடியும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

கடும் பனிபொழிவிற்கு இடயே சூரிய உதயத்திற்காக காத்திருந்த பயணிகள் மேக கூட்டம் விலகியதும் ஆர்வத்துடன் இயற்கையை ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சபரி மலை சீசன் என்பதால் ஐயப்பபக்தர்கள் மட்டுமல்லாது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதால் குமாரி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Related Stories: