கன்னியாகுமரியில்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி வார விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் குவிந்தனர். திருவேணிற்சங்கமம், காந்தி மண்டபம், சுற்றுலா படகுத்துறை போன்ற அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கடலில் ஆனந்தமாக குளித்தும் அலைகளோடு விளையாடியும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.