அரசியல் ‘லோக் ஜனசக்தி கட்சி உடைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரே காரணம்’!: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு..!! Jun 24, 2021 பீகார் முதல்வர் நிதிஷ்குமாரே லோக் ஜனசக்தி கட்சி ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி பாட்னா முதல் அமைச்சர் நிதிஷ்குமாரே சிராக் பாஸ்வான் லோக் ஜனஸ்க்தி கட்சி ராஷ்டிரிய லோக் ஜனகஷ்டி கட்சி பாட்னா: சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரே காரணம் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பராஸ் தலைமையில் ஒரு பிரிவினர் தனியாக செயல்பட தொடங்கியதால் பிளவு ஏற்பட்டது. இதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தான் காரணம் என சிராக் பஸ்வான் குற்றம்சாட்டினார். இதனிடையே பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட நிதிஷ்குமாரே நேரடி காரணம் என்றும் இது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார். 2005, 2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் லோக் ஜனசக்தியை உடைக்க நிதிஷ்குமார் முயற்சித்ததாகவும் தேஜஸ்வி புகார் கூறினார். சிராக் பஸ்வான் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க இதுவே சரியான நேரம் என்றும் குழப்பவாதிகளை விட்டு விலக வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவுறுத்தினார். … The post ‘லோக் ஜனசக்தி கட்சி உடைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரே காரணம்’!: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.
I.N.D.I.A. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வேலைவாய்ப்பை இளைஞர்கள் தேடிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு
கருத்துகளை திரித்து பேசும் பிரதமர் மோடி… I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது : செல்வப்பெருந்தகை
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு
‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி
நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜ மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த முடிவு
கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை
எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை: மோடி மீது ஆந்திரா அமைச்சர் காட்டம்
அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்