சிவகங்கை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடந்த வழக்கில் சிவகங்கை ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் 12 வாரங்களில் ரூ.11.67 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் முறையாக பராமரிக்க தவறியதே மின் விபத்துக்கு காரணம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.