எண்ணூர் கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் கடற்கரையில் மர்மபொருள் ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில சூறைகாற்றுடன் பரவலாக மழை பெய்தது. எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், தடுப்பு பாறாங்கற்களை தாண்டி அலை வந்தது. இந்த நிலையில் எண்ணூர் பாரதியார் நகர் கடல் பகுதியில் பாறைகள் மீது மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கடற்கரையில் திரண்டனர்.

இந்த சம்பவத்தால் எண்ணூர் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், மர்ம பொருளை கைப்பற்றி சோதனை செய்து பார்த்தபோது, துறைமுகம் வரும் கப்பல்களுக்கு வழிகாட்டும் போயா என்னும் மிதவை கருவி என்பது தெரியவந்தது. மேலும் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அலையில் எங்கிருந்தாவது மிதவை கருவி அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியிருக்கலாம் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் எண்ணூர் கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: