திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என மாற்ற தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நேற்று தெலங்கானா பவனில் சந்திரசேகரராவ் முதலில் பிஆர்எஸ் கட்சி தொடக்க விழாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், டிஆர்எஸ் கட்சியை போன்றே ரோஜா நிற கொடியின் மத்தியில் தெலங்கானா மாநில வரைபடத்திற்கு பதில் இந்திய வரைபடத்துடன் கூடிய கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.