சென்னை: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. சென்னையில் நடந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘அதிமுக பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க, ஓ.பன்னீர்செல்வம் வாழ்க’’ என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை, தனித்து போட்டியிடுவோம் என்றார்.