தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 12ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான //awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வருகிற 12ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், சென்னை மாவட்ட பிரிவு, செனாய்நகர் நீச்சல் குளம், செனாய்நகர், சென்னை - 30 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை பெற 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: