புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஒத்திவைக்கப்பட்ட தேர்வு டிச.17ம் தேதி நடைபெறும்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் டிச.17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று(09-12-2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.16ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை(10-12-2022) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட கூடிய பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை(10-12-2022) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.17ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.       

Related Stories: