குஜராத்தில் வெற்றி முகம், இமாச்சலில் இழுபறி: டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

டெல்லி: டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் 11.30 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல இமாச்சலில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 26 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: