சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓவிய, சிற்ப கலை துறையில் சிறந்து விளக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் 10 கலையாசிரியர்களுக்கு தலா ₹10,000 வீதமும், ஓவியம், சிற்ப கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ₹10,000 வீதமும் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஓவியக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களிடம் இருந்தும், ஓவிய, சிற்ப கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.