ஆவடி தொகுதி தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்

ஆவடி: ஆவடி தொகுதி தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். 2016ல் நடந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சா.மு.நாசர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ரூ.28 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டே தவறு என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் சா.மு.நாசர் தரப்பின் குறுக்கு விசாரணை முடிவடையாததால் வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: