சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.