திருவள்ளூர்: மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேலன் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் சுமார் 70 கி.மீ. வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்களை உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.