சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை, திருப்படி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, சித்தரை மாசி பிரமோற்சவம் மற்றும் கந்தசஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், விரதம் இருந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆடி கிருத்திகை விழாவுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு தரிசனத்துக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வருகின்றனர். மேலும் வேண்டுதல் மூலம் குழந்தை பிறந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கைக் குழந்தையுடன் பெண்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலானவர்கள், படிக்கட்டு வழியாக நடந்து செல்கின்றனர்.