திருவள்ளூர்: 2வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் முத்தமிழ் சிலம்பாலயம் குழு மாணவர்கள் 4 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஓசூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வேர்ல்டு யூனியன் சிலம்பம் ஃபெடரேஷன் சார்பில், நடைபெற்ற 2 வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், திருவள்ளூர் முத்தமிழ் சிலம்பாலயம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.