சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தது அணிகள் அல்ல, பிணிகள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்று பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின், ஓ.பன்னீர்செல்வம் அணியை விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.