சென்னை: முரசொலி நாளேட்டின் மூத்த புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த ஏ.ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி: முரசொலி நாளேட்டின் மூத்த புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த ஏ.ராஜேஷ், நாகையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றதை அறிந்து மிகவும் வருந்தினேன். முரசொலி நாளேட்டின் மூத்த புகைப்படக் கலைஞராக 28 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஏ.ராஜேஷ் அவர்களின் அர்ப்பணிப்பும், அயரா உழைப்பும் என்றென்றும் போற்றுதற்குரியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், முரசொலி நாளேட்டின் ஆசிரியர் குழு மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.