திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் மகாரத தேரோட்டம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. மகாரத தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து செல்கின்றனர்.