அகமதாபாத்: என்னை திட்டுவதில் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,’ நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மோடி பிரசாரம் செய்கிறார். அவர் பிரதமர் வேலையை செய்வது இல்லை. அனைத்து இடங்களிலும் தனது முகத்தை பார்த்து வாக்களிக்கும்படி கேட்கிறார். அவர் என்ன 100 தலை கொண்ட ராவணனா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பா.ஜ தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,’ குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதிக்கிறது’ என்று பதில் அளித்தார். இந்த நிலையில் 2கட்ட தேர்தல் நடைபெறும் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ராவணன் விமர்சனத்திற்கு பதில் அளித்து கூறியதாவது: மோடியை யார் அதிகம் திட்டுவது என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது.