சென்னை: விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படியில் ரயில் மற்றும் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும்.