துரைப்பாக்கம்: திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் கிருஷ்ணராஜ் (45). இவர், 10 ஆண்டுக்கு முன் மனைவியை பிரிந்து, தந்தை கோவிந்தராஜூடன் வசித்து வந்தார். கடந்த 5 வருடமாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணராஜ், தந்தை கோவிந்தராஜியிடம் அவ்வப்போது தற்கொலை எண்ணம் வருவதாக கூறி வந்துள்ளார். நேற்று, திருவான்மியூர் கடலில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.