சென்னை: வி ஹவுஸ் படத்தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுரேஷ் காமாட்சி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட எஸ்.எஸ்.ஐ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. இந்த தொகையில் 27 லட்ச ரூபாய், ஜி.எஸ்.டி பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என, ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை அந்த நிறுவனம் தர வேண்டிய நிலையில், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’ என்ற மலையாளப் படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனம் உரிமை வாங்கி இருக்கிறது.