சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. பாலின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர் நாசர், செயலாளர் கார்த்திக் ஆகியோர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பால் விற்பனையை அதிகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது.