சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் சேலம், நாமக்கல், ஈரோடு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் ஜனவரி 15 வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 137 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மேலும் 47 நாட்களுக்கு நீர்திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.