திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காரத்திகை மகா தீபத் திருவிழா 06.12.2022 செவ்வாய் அன்று நடைபெறுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிக்கப்பட்ட 06.12.2022 நாளை உள்ளுர் விடுமுறையாக அனுபவித்துள்ளதால் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 (மத்திய சட்டம் XXVI/1881)-ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை.