சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று பேரமைப்பின் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் காலை 11.05 மணிக்கு மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் டெஸ்ட் பர்ச்சேஸ்,ஜிஎஸ்டி நெருக்கடிகள் குறித்து கவன ஈர்ப்பு மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.