விக்கிரமராஜா அறிவிப்பு வணிகவரித்துறை அதிகாரிகளிடம் இன்று கவன ஈர்ப்பு மனு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று பேரமைப்பின் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் காலை 11.05 மணிக்கு மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் டெஸ்ட் பர்ச்சேஸ்,ஜிஎஸ்டி நெருக்கடிகள் குறித்து கவன ஈர்ப்பு மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனது தலைமையில் சென்னை பூவிருந்தவல்லி, நசரத்பேட்டையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, காஞ்சி மண்டலத் தலைவர் அமல்ராஜ் ஆகியோருடன் இணைந்து கோரிக்கை மனு அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: